Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர்: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மாநில நெடுஞ்சாலை அருகே சார்லஸ் நகரில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் கலைச்செல்வி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த டாஸ்மாக் கடை அருகே பள்ளிகள், கோவில்கள், மருத்துவமனை என பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து.
200கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட முயன்றதையடுத்து, அவர்களை பட்டாபிராம் உதவி ஆணையர் வெங்கடேசன் மற்றும் பட்டாபிராம் காவல் நிலைய தலைமை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் சமரசம் செய்தனர்.
அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். இந்த போராட்டத்தில் சட்ட ஆலோசகர் கவிதா காந்தி ஆவடி நகர தலைவி சௌந்தர்யா மற்றும் பட்டாபிராம் பகுதி வியாபார சங்க செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர் சந்திரசேகர் மற்றும் வழக்கறிஞர் சுகுமார் மற்றும் அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டனர்.